கசிப்புடன் இரு பெண்கள் கைது
-யாழ் நிருபர்-
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை பகுதியில் , 21 லீட்டர் கசிப்புடன் இரு பெண்கள் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 வயதுப் பெண் 16 லீட்டர் கசிப்புடனும், 42 வயதுப் பெண் 5 லீட்டர் கசிப்புடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.