கங்கைக்கு அருகில் பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!
களு கங்கையில் பெண் ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
தொடங்கொட கொஹொலான வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய பெண்ணொருவரையே முதலை இழுத்துச் சென்றுள்ளது.
களுத்துறை கொஹொலன பிரதேசத்தில் களு கங்கைக்கு அருகில் குறித்த பெண் பாத்திரம் கழுவச் சென்றவேளை, அவரை முதலை இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதைத்தொடர்ந்து படகுகள் மூலம் பிரதேச மக்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் முதலை இழுத்துச் சென்ற பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்