ஒவ்வொரு வருடமும் சிறுவர்கள் தொடர்பான 5000 குற்றங்கள் பதிவு

வருடாந்தம் சிறுவர்கள் தொடர்பான 5000 குற்றங்கள் பதிவாகி வருவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

அவற்றில் பல குற்றங்கள் போதைப்பொருள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தியதன் விளைவாக இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் வருடாந்தம் குறைந்தது 5000 சிறுவர்கள் தொடர்பான குற்றச் செயல்கள் பதிவாவதாக தரவுகள் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிறுவர்கள் தொடர்பான குற்றங்களுக்கும்இ பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கும் போதைப்பொருள் முக்கிய காரணியாக இருப்பதாக தெரிவித்த அவர் கையடக்கத் தொலைபேசிகள் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்தப்படும் ஆயுதமாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

‘சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை குறைக்க முயற்சித்த போதிலும்இ மொபைல் போன்களின் அதிக பயன்பாடு காரணமாக எங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை. இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைக்க வேண்டுமாயின் பெற்றோர்கள் வீட்டில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்இ’ என்றார்.

இலங்கையில் சிறுவர் தொடர்பான குற்றங்களுக்கு மற்றொரு முக்கிய காரணியாக போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையை  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடையாளம் காட்டினார்.

 

Minnal24 FM