ஐம்பதுக்கும் மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவர்

வவுனியாவில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா நகர், பூவரசங்குளம், நெடுங்கேனி, ஒமந்தை, கனகராயன்குளம் என வவுனியா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் கத்தி முனைகளில் வீடுகளில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபடுவது என ஐம்பதுக்கும் மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் தொடர்பில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகர ஆலோசனையின் கீழ் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வனப்பகுதிகளில் தங்குவதை வழமையாக கொண்டுள்ள குறித்த 43 வயதுடைய நபர் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் என சந்தேகிக்கப்படும் இரு இயந்திரங்களுடன் கைது செய்துள்ளதுடன் அவருக்கு உதவியாக செயற்பட்டார் என சந்தேகிக்கப்படும் 30 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட பிரதான நபருக்கு எதிராக நீதிமன்றில் நான்கு திறந்த பிடியாணை மற்றும் ஆறு திகதியிடப்பட்ட பிடியாணை என்பன இருப்பதுடன் அவர்களிடம் முன்னெடுக்கப்படுகின்ற மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்