
ஏலக்காய் பொதிகளுடன் இருவர் கைது
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஏலக்காய் பொதிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 8 மற்றும் கொழும்பு 13 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 41 மற்றும் 49 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, நேற்று சனிக்கிழமை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது, 117 கிலோ அடங்கிய ஏலக்காய் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.