ஏறாவூர் மீராகேணி பாலத்தின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு

– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று புனரமைப்பு செய்யப்படாதிருந்த  ஏறாவூர் மீராகேணி வீதியிலுள்ள பிரதான பாலத்தின் அபிவிருத்தி வேலைகள் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகரை இணைக்கும் மீராகேணி வீதியும் அதனோடு உள்ள இந்தப் பாலமும் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக புனரமைப்புச் செய்யப்படாது கவனிப்பாரற்றுக் கிடந்ததால் தினமும் இந்த வீதியைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்துச் செய்வதில் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

சுற்றாடல்துறை முன்னாள் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான நஸீர் அஹமட் நடவடிக்கை எடுத்ததன் பேரில் வீதி அபிவிருத்தி பெருந்தெருக்கள் அமைச்சின் 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மீராகேணி வீதி பிரதான பாலத்தின் நிர்மாண வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில் பொறியியலாளர் எம். சர்ஜுன், முன்னாள் சுற்றாடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ. அப்துல் நாஸர், ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர்களான  எம்.ஐ.எம். தஸ்லீம், எம்.சி கபூர், தொழினுட்ப உத்தியோகத்தர் எம். பைஸல் ஆகியோரும் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் மீராகேணி பாலத்தின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு

ஏறாவூர் மீராகேணி பாலத்தின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு

ஏறாவூர் மீராகேணி பாலத்தின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு

ஏறாவூர் மீராகேணி பாலத்தின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு

ஏறாவூர் மீராகேணி பாலத்தின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு

ஏறாவூர் மீராகேணி பாலத்தின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு

ஏறாவூர் மீராகேணி பாலத்தின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க