
எலிக்காய்ச்சல் பரவலை தடுக்க விசேட நடவடிக்கை
நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் ஆபத்தான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 நிர்வாக மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு அறிவுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் 1,200 சுகாதார பரிசோதகர்கள் மற்றும் 3,500 குடும்ப சுகாதார செவிலியர்கள் இன்று திங்கட்கிழமை முதல் பணிக்கு அமர்த்தப்படுவார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் நாடு முழுவதும் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தை உட்கொள்ளாத எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100 நோயாளிகள் ஆண்டுதோறும் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்