
எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்
எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.