-நுவரெலியா நிருபர்-
பொகவந்தலாவ ஆரியபுர பிரதேசத்தில் வசிக்கும் கெலும் பிரதீப் என்பவரின் வீட்டில், ஊதா நிற கொய்யா பழங்கள் காய்த்துள்ளது.
குறித்த கொய்யா மரத்தில் ஊதா நிறம், பூக்கள் மற்றும் பழங்கள் இருப்பதாகவும், வட்டவளை கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டில் இருந்து இந்த கொய்யா மரத்தை கொண்டு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் முன்னர் நட்டதாகவும் உரிமையாளர் கூறினார்.
இந்தக் கொய்யா மரத்தைப் பார்ப்பதற்காக ஏராளமான பொது மக்கள் தினமும் தனது வீட்டிற்கு வருவதாக கெலும் பிரதீப் கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்