உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 13 பேர் பலி
உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்குமிடையே 1,050ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா மாகாணத்தில் ரஷ்யா நேற்று புதன் கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இரு நாடுகளுக்குமிடையிலான போரை நிறுத்தப் பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. போர் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்