
இலங்கை வந்த இரண்டு வெளிநாட்டு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி
பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை – வெலிமடை வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விகாரை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெளிநாட்டு பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
80 மற்றும் 76 வயதுடைய இரண்டு அவுஸ்திரேலிய பெண்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வேன் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மதில் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது வேனில் பயணித்த இரண்டு வெளிநாட்டு பெண்கள் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்