
இரும்பு பொருட்கள் ஏற்றி சென்ற 3 சந்தேக நபர்கள் கைது
புகையிரத திணைக்களத்திற்குசொந்தமான ஒரு தொகை இரும்பு பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி உட்பட 3 சந்தேக நபர்களை இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் கைது செய்துள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் தியத்தலாவ, வெளிமடை,மற்றும் பண்டாரவளையை சேர்ந்த 22,35,40 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
தியத்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து தியத்தலாவ நகரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் முச்சக்கர வண்டி ஒன்றினுள் புகையிரத பாதையில் உள்ள இரும்பு ஆணிகள் ,மற்றும் ஒரு தொகை இரும்பு பொருடகளை கைப்பற்றியுள்ளனர்.
பண்டாரவளை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதிப் களுபஹனவின் ஆலோசனைக்கு அமைய தியத்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
தயாரத்ன உட்பட்ட குழுவினரால் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபரை பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை தியத்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.