இராணுவத்தினரால் மாணவர்கள், கர்ப்பிணிகள், வயோதிபர்களுக்கு வழங்கப்பட்ட உதவி
இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 513ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து கொண்டதுடன் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மானந்த யஹம்பத், கனாடாவைச் சேர்ந்த வர்த்தகர் ரஜிகரன் சண்முகரத்தினம், தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பரா.நந்தகுமார், சண்டிலிப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் கர்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வர்த்தகரான ரஜிகரன் சண்முகரத்தினத்தின் நிதி உதவியில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்