இரவு முழுவதும் உல்லாசம்: அதிகாலையில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியத்தால் அதிர்ச்சியில் மக்கள்

இந்தியாவில் திருமணமாகாத நபருக்கும் 2 பிள்ளைகளின் தாய்க்கும் இடையில் இருந்த திருமணத்திற்கு பிந்திய உறவினால் இருவரும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

திருச்சி உறையூர் வடிவேல் நகரில் வசித்து வந்தவர் நந்தகுமார் (வயது – 32) என்பவரும் திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தியின் மனைவி ஜெயசித்ரா (வயது – 47) என்பவருமே இவ்வாறு தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

நந்தகுமார் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நந்தகுமாருக்கும், ஜெயசித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு பிந்திய தவறான உறவாக மாறியது.

இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது விவகாரம் கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதை கைவிடும் படி கூறி வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில்இ இரு குடும்பத்தார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததால் குறித்த ஜோடி தற்கொலை செய்ய முடிவு எடுத்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு நந்தகுமார், ஜெயசித்ராவை தனது வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர், அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். நீண்ட நேரமாகியும் நந்தகுமார் வீடு திறக்கப்பட்டாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர்.அப்போது இருவரும் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.