
இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: 30 பேர் காயம்
ஹம்பாந்தோட்டை – பெலியத்த பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையிலும் , பெலியத்தவில் உள்ள வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
திக்வெல்லவிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த தனியார் பேருந்து, எதிர் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்