இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பேருந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கட்டணங்கள் 35 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டு, 20 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாவாக அதிகரிப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க