இந்திய மீனவர்களை விரட்டியடித்த இலங்கை மீனவர்கள்

கச்சத்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இராமேஸ்வர கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இராமேஸ்வர கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்பட்ட மீன்களையும் இலங்கை கடற்றொழிலாளர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக இந்திய கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.