
இந்தியா – பாகிஸ்தான் பதற்றம் காரணமாக IPL தொடரின் 61ஆவது போட்டி இடமாற்றம்
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி தரம்சாலாவில் நடைபெறவிருந்த குறித்த போட்டி அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் இருந்து கராச்சிக்கு மாற்றுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்