இந்தியா செல்ல புறப்பட்ட சபரிமலை யாத்திரை குழுவினர்!
மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவெம்பு ஸ்ரீ ஜயப்பசுவாமி ஆலய குருசாமி சிவஸ்ரீ விஜயகுமார் தலைமையிலான சபரிமலை யாத்திரை குழுவினர் ஜயப்ப சுவாமியை தரிசிக்க இந்தியா செல்ல புறப்பட்டனர்.
இதற்காக ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்றது.
உறவுகளின் ஆசிர்வாதத்துடன் பாத பூசைகள் நடைபெற்று, இருமுடி சுமந்து ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அம்மனை தரிசித்து அங்கிருந்து புறப்பட்டனர்.
எதிர்வரும் சில தினங்களில் இந்தியா சென்று அங்கு தரிசனம் செய்து, ஜோதி பூஜை கண்டவுடன் மீண்டும் இலங்கை வந்தடைவார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்