அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது:
அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
இதற்கமைய, அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
உள்நாட்டு சந்தையில் அரிசித் தட்டுப்பாடு 2025 ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்