
அரச பேருந்தில் மோதி 2 வயது சிறுவன் பலி
களுத்துறையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோதி இரண்டு வயது சிறுவன் இன்று புதன் கிழமை உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வஸ்கடுவ காலி வீதியைச் சேர்ந்த நிஹன்சா யாஷ் வீரதுங்க (வயது – 2) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்