
அம்பாறையில் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது
அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் 810 கிராம் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளதாக இறக்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த போதை பொருள் வியாபாரியின் வீட்டைநேற்று இரவு 11 மணியளவில் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
இதன்போது வியாபாரத்திற்காக கொண்டுவரப்பட்ட 810 கிராம் ஜஸ் போதை பொருளை மீட்டதுடன் 32 வயதுடைய வியாபாரியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் சந்தேக நபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்