
அம்பாறையில் பொலிஸ் கான்ஸ்டபிளின் தவறான முடிவு
அம்பாறை – பதியதலாவை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிபிலை பகுதியை சேர்ந்த 59 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
பதியதலாவை பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பதியதலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்