
அம்பாறையில் கசிப்புடன் ஒருவர் கைது
-சம்மாந்துறை நிருபர்-
அம்பாறையில் நேற்று சனிக்கிழமை இரவு வீட்டில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை, திருவள்ளுவர் புரம் பகுதியில் கசிப்புடன் நேற்று இரவு 9.30 மணியளவில் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினரினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளுவர் புரம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது 7,500 மில்லி லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டது.
சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்