அமைச்சர் டக்ளஸ் உறுதிமொழி: உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது

-யாழ் நிருபர்-

இந்திய அத்துமீறிய மீன்பிடியாளர் களை நிறுத்துமாறு கோரி நான்கு நாட்கள் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப் போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியால் கைவிடப்பட்டது.

கடந்த செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு அருகாமையில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு போர் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இன்று நான்காம் நாள் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய அத்துமீறிய கடற் தொழிலாளர்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசினேன்.

பாண்டிச்சேரி முதலமைச்சர் எல்லை தாண்டும் மீனவர்களை தடுப்பது தொடர்பில் எழுத்துமூலமான உறுதிமொழி தந்துள்ளார்.

தமிழக முதல்வர் கடிதம் அனுப்பத் தயாராக இருப்பதாகவும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையகத்துடன் ஆலோசித்து கடிதம் அனுப்புவதாக கூறியிருக்கிறார்.

மீனவர் பிரச்சனை தொடர்பில் பேச வருமாறு இந்திய தரப்பினர் அழைப்பு கொடுத்திருந்தார்கள் நான் அவர்களிடம் கூறி இருக்கிறேன் இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வர மாட்டார்கள் என்ற எழுத்து மூலமாக உத்தரவாதம் தந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவேன் எனக் கூறியுள்ளேன்.

எனது நிலைப்பாடு அன்று என்ன கூறினோனே அதுதான் எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு வார்கள்.

கைது செய்யப்படுபவர்களை விடுவிக்க எனக்கு அழுத்தங்கள் வந்தாலும் எனது நிலைப்பாடு ஒன்றுதான்.

இதனால் தான் இந்தியா என்னை எதிரியாப் பார்க்கிறது ஏனைய தமிழ் அரசியல் வாதிகள் மீனவர் பிரச்சினையில் மெளனமாக இருப்பதால் எதிரியாக பார்ப்பதில்லை .

ஆகவே இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞைகளை காண்பித்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுங்கள் மீனவர்கள் பக்கமே நான் நிற்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்

குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக தும்பளை, கொட்டடி, சேந்தான் குளம், குருநகர், மாதகல், பலாலி, தையிட்டி, சக்கோட்டை, மயிலிட்டி, வளலாய், மயிலிட்டி மற்றும் சீத்திப்பந்தல் ஆகிய கடற்தொழில் சங்கங்களைச் சேர்த்து மீனவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகை தந்தனர்.