அப்துல் கலாம் கட்டுரைகள்

அப்துல் கலாம் கட்டுரைகள்

💢இளைஞர்களே கனவு காணுங்கள், இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கைகளிலே உள்ளது எனக் கூறியவர் தான் மறைந்த ஏவுகணைத் தொழில்நுட்ப விஞ்ஞானியும், இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் திரு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆவார் இன்றைக்கும் கூட இந்திய இளைஞர்களின் ஆசை நாயகனாக விளங்கும் திரு. அப்துல்கலாம் அவர்கள் குறித்த கட்டுரையாகத்தான் இக்கட்டுரை அமைகின்றது.

💢1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் திகதி தமிழ் நாட்டில் இருக்கின்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கின்ற புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான ராமேஸ்வரம் நகரத்தில் பாரம்பரியம் மிக்க இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்கையார் ஜைனுலாப்தீன, தாயார் ஆயிஷாமா ஆவர். இவருக்க நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருந்தனர்.

💢அப்துல்கலாமின் தந்தை ராமேஸ்வரத்திற்கு வருகின்ற பக்தர்களை தனுஸ்கோடிக்கும் மற்றும் ராமேஸ்வரத்திற்கு அழைக்து வரும் படகுகளை சொந்தமாக வைத்து தொழில் புரிந்து வந்தார். பூர்வீகத்தில் மிகவும் செல்வந்த குடும்பமாக இருந்தாலும் அப்துல்கலாம் பிறந்த வேளையில் அவர்களுடைய குடும்பம் வறுமையில் இருந்தது. குடும்பத்தின் இந்த வறுமை நிலையினைப் போக்க அப்துல்கலாம் தன்னுடைய பாடலை நேரம் முஎவடைந்து பகுதி நேரத்தில் செய்தித்தாள்களை விற்பனை செய்து வருமானம் ஈட்டி தன்னுடைய குடும்பத்திற்கு உதவியாக இருந்தார். பாடசாலைக் காலத்தின் பின்னர் திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரபலமான செயின்ட் ஜோசப் கல்லூரில் இயற்பியல் துறையை தேர்ந்தெடுத்து 1954ஆம் ஆண்டு பட்டப் படிப்பை நிறை?வு செய்தார். தனக்கு இயற்பிலில் ஆர்வம் இல்லை என்பதை உணர்ந்த அவர் தன்னுடைய சிறுவயது கனவான போர் விமானி ஆகும். முயற்சியினை மேற்கொண்டார்.

💢எனினும் போர் விமானியாகும் சில தகுதித் தேர்வில் அவர் சில மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததால், அவரின் அந்த லட்சியம் தவிடு பொடியாகியது. எனினும் 1955ஆம் ஆண்டு சென்னை குரோம்பேட்டடையில் உள்ள எம். ஜ.டி தொழில் கல்வி நிறுவனத்தில்  விண்வெளி பொறியியல்’ படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார். பின்னர் அதே கல்லூரியில் தன்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை படித்து முடித்தார்.

💢தன்னுடைய பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின்னர் 1960ஆம் ஆண்டு அப்துல்கலாம் மத்திய அரசின் கீழ் இயங்குமு; பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். அங்கு ‘ஹோரவோர் கிராப்ட்’ எனப்படும் நிலம்- நீரில் செல்லக் கூடிய வாகனத்தை உருவாக்கினார். சில காலத்தில் அப்போது இருந்த தீரு. விக்ரம் சாபாய் அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ் பணிபுரியும் வாய்ப்பை அப்துல்கலாம் பெற்றார்.

அப்துல் கலாம் கட்டுரைகள் தமிழ்

💢1963-64 வரை அப்துல்கலாம் அவர்கள் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தலைமையகம் மற்றும் ஏனைய விண்வெளி ஆய்வு தளங்களுக்கு சென்று பார்வையிட்டு இந்திhவில் எத்தகைய விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான திட்டங்களை வகுத்தார். 1969ஆம் ஆண்டு இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி நிறுவனத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்ட அப்துல்கலாம், இந்தியாவின் முதல் எஸ் எல் வி எனப்புடும் விண்வெளி ஏவுதள திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார். விஞஞானி கலாமினுடைய கோரிக்கைக்கு அமைய மேலும் பல விண்வெளி ஆய்வு விஞ்ஞான பொறியியலாளர்களை இஸ்ரோ நிறுவனத்தில் சேர்க்க அப்போதைய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

💢மேலும் இவரது தலைமையின் கீழ் ரோகிணி- 1எனப்படும் ஒரு செயற்கைக் கோள் 1980 ஆம் ஆண்டு விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதனை கௌரவிக்கும் முகமாக 1981ஆம் ஆண்டு ‘பத்மபூசன்’ விருது மத்திய அரசினால் வழங்கப்பட்டது. 1970தொடக்கம் 1990 ஆண்டுகள் காலகட்டத்திரல் இந்தியாவின் பி.ஸ் எல். வி எனப்படும் விண்வெளித் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினார். இவர் பெற்ற விருதுகள் பின்வருமாறு,
💥1981 – பத்ம பூஷன்
💥1990 – பத்ம விபூஷன்
💥1997 – பாரத ரத்னா
💥1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
💥1998 – வீர் சவர்கார் விருது
💥2000 – ராமானுஜன் விருது
💥2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம், அமேரிக்க
💥2007 – கிங் சார்லஸ்-ஐஐ பட்டம் இங்கிலாந்து
💥2008 – பொறியியல் டாக்டர் பட்டம், சிங்கப்பூர்
💥2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது, அமெரிக்கா
💥2009 – ஹூவர் மெடல், அமெரிக்கா
💥2010 – பொறியியல் டாக்டர் பட்டம் கனடா
💥2012 – சட்டங்களின் டாக்டர் கனடா
💥2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
💥2013 – வான் பிரான் விருது அமெரிக்கா
💥2014 – டாக்டர் ஆப் சயின்ஸ் மலேஷியா
💥2014 – கௌரவ விரிவுரையாளர் பெய்ஜிங் பல்கலைக்கழகம்

💢இந்தியாவின் மீது பற்றுக் கொண்ட அபட்துல்கலாம், அரசியலில் பெரிய அளவு ஈடுபாடு இல்லாத நபராகவே இருந்தார். எனினும் அவர் மீது மரியாதை கொண்ட அப்போதைய பிரதமர் திரு. வாஜ்பாய் யவர்களின் வேண்டுகொளை ஏற்று 2002ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் வரையான 5 ஆண்டுகள் முழுதும் இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

💢பதவிக் காலத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் அவருக்கும், அவர் வகித்த ஜனாதிபதிக்கும் இந்திய மக்களுpடம் பெரும் மதிப்பு உருலாகியது. 2007ஆம் ஆண்டு அவரின் பதவிக் காலம் முடிந்ததும் மீண்டும் இந்திய நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயன்றார். எனினும் பல்வேறு காரணங்களால் அந்தப் போட்டியிலிருந்து விலகினார்.

💢இத்தகைய அப்துல்கலாம் 2015ஆம் ஆண்டு ஜீலை மாதம் 27ஆம் திகதி மேகாலாயா தலைநகர் ஷில்லாங்கில் மத்திய அரசின் இந்திய நிர்வாக கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்படழ்டிருந்த நிகழ்வில் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவால் மேடையிலேயே நிலை தடுமாறி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சில மணி நேரத்தில் திரு. அப்துல்கலாம் அவர்கள் காலமானார். ஜீலை மாதம் 30ஆம் திகதி அவரது செந்த ஊரான ராமேஸ்வரத்தில் இருக்கின்ற பேய்கரும்பு எனும் இடத்தில் முழு அரசமரியாதையுடன், இஸ்லாமிய மத சம்பிரதாயத்துடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்துல்கலாம் மீது கொண்ட அன்பு மற்றும் மரியாதை காரணமாக அவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்களும் மற்றும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர் தன்னுடைய விஞ்ஞான ஆய்வு வாழ்க்கைக்கு குடும்ப வாழ்க்கை ஒரு பாரமாக இருக்கும் என கருதிய கலாம் அவர்கள் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்