
அபராதம் விதிக்கப்படும் என இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை
ஜனவரி 01, 2024 முதல் நடைமுறைக்கு வரும் வரி தொடர்பான நினைவூட்டலை இலங்கையின் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஒரு அறிவிப்பை வெளியிட்ட திணைக்களம், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எந்தவொரு நபரும் உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தில் பதிவுசெய்து வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறுவது கட்டாயமாகும்.
அறிவுறுத்தல்களின்படி, பதிவு பெறாத நபர்களுக்கு 50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கீழே தரப்பட்டுள்ள லிங்கை அழுத்தி இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று பதிவு செய்யலாம்.