அனாமிகா பண்பாட்டு மையத்தின் கலை இலக்கிய ஒன்று கூடலும், விருது வழங்கல் நிகழ்வும்

-மூதூர் நிருபர்-

மூதூர் -சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் அனாமிகா நினைவுப் பேருரையும், கலை இலக்கிய ஒன்று கூடலும் ,விருது வழங்கல் நிகழ்வும் மூதூர் சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

இதன்போது கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.அத்தோடு பல்துறை கலைஞர்கள் 8 பேர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது தோப்பூரைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் எம்.என்.எம்.புஹாரி ஊடகத் துறைக்கான இளம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நினைவுச் சின்னமும் பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்த சிறப்பித்தார்.ஏனைய அதிதியாக தமிழ்நாட்டு பேராசிரியர் கி.பார்த்திபராஜா கலந்து சிறப்பித்திறந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்