
அதிகாரிகள் பணி முடிந்து வீடுகளுக்குத் திரும்பிய பின் சிவப்பு பச்சை அரிசி விற்கப்படுகின்றது!
நெல்லுக்கான நிர்ணய விலை விரைவில் தீர்மானிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை – பன்கமுவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தென் மாகாணத்தில் சிவப்பு பச்சை அரிசி விற்பனைக்குக் காணப்படுகின்றது, எனினும் அதனை மாலை 5 மணிக்கு பின்னரே விற்பனை செய்கின்றனர்.
அந்த சந்தர்ப்பத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபையினர் பணியை நிறைவு செய்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியதன் பின்னர், இவ்வாறு விற்பனை இடம்பெறுவதாக, விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்