அடுத்த வருடம் முதல் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கறுவாப்பட்டை
நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையின் மூலம் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கறுவா உற்பத்தி வருடத்திற்கு 25,000 மெட்ரிக் தொன்களாகும், இதில் 19,000 மெட்ரிக் தொன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இலங்கை தற்போது கறுவா ஏற்றுமதியின் மூலம் 250 மில்லியன் டொலர் அந்நிய செலாவணியை ஈட்டி வருவதாக கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கறுவா ஏற்றுமதி தொடர்பில் சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனக லிந்தர தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சீனாவுக்கும் கறுவா ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos