அங்கொடயில் தீப்பரவல்!

அங்கொட சந்தியில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைக்கும் பணியில் மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க